ADDED : ஜன 16, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளத்தி அருகே கணவரை காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி, செல்லபெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி, 69; கூலித் தொழிலாளி. இவர், தனது மனைவியுடன் கடந்த 12ம் தேதி மேல்மலையனுார் கோவிலுக்குச் சென்றார். அங்க, தனது செலவிற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர், பிறகு தருகிறேன் என கூறியுள்ளார்.
இதனால், மனைவியிடம் கோபித்துக்கொண்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து, அவரது மனைவி திரிபுரசுந்தரி கொடுத்த புகாரின் பேரில், வளத்தி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.