ADDED : அக் 26, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் பணிக்கு சென்ற கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம், வண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரகுமான், 35; இவர், சென்னை நெடுஞ்சாலையில் உள்ள நுகர்பொருள் வணிகவளாக அலுவலகத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 23ம் தேதி வழக்கம் போல் பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது மனைவி துர்கா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

