ADDED : ஜூலை 30, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பணிக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் சண்முகவேல்,46; இவர், பனையபுரம் கிராமத்தில் ஆட்டோ ஒர்க்ஷாப் வைத்துள்ளார்.
கடந்த, 24ம் தேதி வீட்டிலிருந்து பணிக்கு சென்றவர் மீண்டும் வரவில்லை. அவரை மனைவி பிரேமலதா மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

