sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முகுந்தனுக்கு முக்கியத்துவம்: பா.ம.க.,வில் திடீர் திருப்பம்

/

முகுந்தனுக்கு முக்கியத்துவம்: பா.ம.க.,வில் திடீர் திருப்பம்

முகுந்தனுக்கு முக்கியத்துவம்: பா.ம.க.,வில் திடீர் திருப்பம்

முகுந்தனுக்கு முக்கியத்துவம்: பா.ம.க.,வில் திடீர் திருப்பம்

1


ADDED : ஏப் 15, 2025 04:45 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 04:45 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வரும் மே 11 ம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடு, நடக்க உள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நடக்க உள்ளதால், லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்க முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பல்வேறு இடங்களில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தி அதிக வாகனங்களில் வர அறிவுறுத்தினார்.

இந்த சூழ்நிலையில் கட்சி நிறுவனரான ராமதாஸ், அன்புமணிக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக, அன்புமணியிடமிருந்த மாநில தலைவர் பதவியை பறித்துவிட்டு, செயல்தலைவராக நியமிக்கப்பட்டார்.

ராமதாஸ் அறிவிப்பு, கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோதலுக்கு ராமதாஸ், தன்னுடைய பேரன் முகுந்தனை, மாநில இளைஞர் சங்க தலைவராக நியமித்ததுதான் காரணம் கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

இதனால் கட்சியில் பட்டும் படாமல் முகுந்தன் இருந்து வந்தார்.

தற்போது மாமல்லபுரம் மாநாட்டிற்கு முகுந்தனை கட்சி நிர்வாகிகள் முன்னிலைப்படுத்தி வருகின்றனர். விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு அடுத்து முகுந்தன் பெயர் சுவர் விளம்பரங்களில் அதிக அளவில் இடம் பெற்றுள்ளது.

சில இடங்களில் ராமதாஸ், காடுவெட்டி குருவிற்கு அடுத்ததாக அன்புமணி பெயரில்லாமல் முகுந்தன் மாநாட்டிற்கு அழைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் மாநாட்டில் முகுந்தன் பெயர் முன்னிலைப்படுத்தி வருவது, பா.ம.க.,வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us