/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.4.07 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா
/
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.4.07 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.4.07 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.4.07 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா
ADDED : ஜன 29, 2026 06:25 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் ரூ.4.07 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பொன்முடி, லட்சுமணன், அன்னியூர் சிவா முன்னிலை வகித்தனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் உபகரணங்களை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவக்கல்வி இயக்ககம் மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை முதல்வர் லுாசி நிர்மல் மெடோனா, இணை இயக்குநர் (நலப்பணிகள்) சாந்தகுமாரி, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், மருத்துவ நிலைய அலுவலர் ரவிக்குமார், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா அரசி, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ஷீலாதேவி சேரன், ஊராட்சிக்குழு உறப்பினர் மீனா வெங்கடேசன், ஒன்றியக்குழு துணை தலைவர் ஜீவிதா ரவி, ஒன்றியக்குழு உறுப்பினர் இளவரசி ஜெயபால், முண்டியம்பாக்கம் ஊராட்சி தலைவர் சந்திரசேகரன் உட்பட டாக்டர்கள், சென்னை பேனியன், கடலுார் ஓயாசிஸ் மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

