ADDED : ஏப் 10, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் கலியமூர்த்தி, முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகக்குழு சரவணன், பொருளாளர் இன்பஒளி கண்டன உரையாற்றினர். மாவட்ட நிர்வாகக்குழு ராமச்சந்திரன், சகாபுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும், வக்ப் வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷம் எழுப்பினர்.