/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சோலார் பேனல் மின்சாரம் திட்டத்தில் சேர அழைப்பு
/
சோலார் பேனல் மின்சாரம் திட்டத்தில் சேர அழைப்பு
ADDED : மார் 04, 2024 12:10 AM
விழுப்புரம் : வீடுகளில் சோலார் பேனல் மூலம் பேட்டரிகளில் மின்சாரம் சேமிக்கும் திட்டத்தில் பொதுமக்கள் இணைய வேண்டும் என புதுச்சேரி கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
வீடுகளில் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமித்து மக்களே பயன்படுத்த முடியும் என்பதற்காக, மாதந்தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் இணைவோர், தங்களுடைய வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதோடு உபரி மின்சாரத்தை வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொரு குடும்பமும் மிச்சப்படுத்தும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த திட்டம் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கும் உதவுகிறது.
இந்த திட்டத்தில், இணைய விரும்பும் பொதுமக்களின் விபரங்களை சேகரிக்கும் பணியை மேற்கொள்ள அனைத்து தபால்காரர்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பெற, புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள தபால்காரரையோ அல்லது அருகேவுள்ள தபால் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு தங்கள் விபரத்தை பதிவு செய்யலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

