sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மழையால் பணிகள் தாமதம் தள்ளிப்போகிறதா த.வெ.க., மாநாடு

/

மழையால் பணிகள் தாமதம் தள்ளிப்போகிறதா த.வெ.க., மாநாடு

மழையால் பணிகள் தாமதம் தள்ளிப்போகிறதா த.வெ.க., மாநாடு

மழையால் பணிகள் தாமதம் தள்ளிப்போகிறதா த.வெ.க., மாநாடு


ADDED : அக் 16, 2024 08:17 AM

Google News

ADDED : அக் 16, 2024 08:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்ற இடத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு, வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. மழையையும் பொருட்படுத்தாமல், வரும் 24ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டு செய்து வருகின்றனர்.

கட்சி தலைவர் விஜய், மாநாட்டு மேடையை சென்றடையும் வகையில் தார்சாலை, மேடையின் நடுவே பார்வையாளர்களை பார்த்து கையசைக்கும் வகையில் விஜய் நடந்து வர வசதியாக ரேம்ப் அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநாட்டு திடல் முழுதும் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. மாநாடு நடைபெறும் தேதி வரை மழை பெய்தால் இதை நிலை நீடிக்கும் இந்நிலையில், நேற்று பிற்பகல் மாநாட்டில் சுகாதார ஏற்பாட்டிற்காக மருத்துவ குழுவினர் வந்து பார்வையிட்டு, மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த்திடம் ஆலோசனை செய்தனர்.

மழை தொடர்ந்து பெய்தால் மாநாடு நடைபெறும் தேதி மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us