ADDED : ஏப் 15, 2025 08:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
இ.எஸ்., கல்விக்குழும தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி, மாணவர்களை வாழ்த்தி பணி நியமன ஆணையை வழங்கினார். அலுவலர் மாயவன் வரவேற்றார். முதல்வர் வேல்முருகன் சிறப்புரையாற்றினார். இதில், 69 மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் சிவபாரதி நன்றி கூறினார்.