/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜெ., பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்
/
ஜெ., பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : பிப் 25, 2026 05:02 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் மாவட்ட ஜெ.,பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஜெ., பேரவை இணைச் செயலாளர் வடபழனி தலைமை தாங்கினார். அர்ஜூனன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் ரூபன்ராஜ், மாநில ஜெ.,பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் சண்முகம், 1000 பெண்களுக்கு தையல் இயந்திரம், மிக்சி. குக்கர் உள்ளிட்டநலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் ஏழுமலை, மாவட்ட அவைத் தலைவர் தீனதயாளன், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், எம்.ஜி.ஆர்.மன்றம் ரவி, வழக்கறிஞர்கள் சவுகத்அலி, கார்த்திக் கரு ணாகரன், அண்ணா தொழற்சங்கம் பாலு நிர்வாகிகள் தேவ ஏழுமலை, அன்பு, மகேஷ், சரவணன், கார்த்திக், ஞானவேல், வெங்கடேசன், வினோத் உட்பட பலர் பங்கேற்றனர்.

