/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் பலாத்காரம் தொழிலாளிக்கு சிறை
/
பெண் பலாத்காரம் தொழிலாளிக்கு சிறை
ADDED : செப் 28, 2024 06:56 AM

விழுப்புரம் : பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு, விழுப்புரம் கோர்ட்டில் மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது.
விழுப்புரம் மாவட்டம், தாதி குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் பிரகாஷ், 31; கூலித் தொழிலாளி. இவர், 23 வயது பெண்ணை கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், பிரகாஷை கைது செய்த வளத்தி போலீசார், அவர் மீது விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கீதா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன், குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷுக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
இதனையடுத்து, பிரகாஷ், கடலுார் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.