/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் கம்பன் விழா நிறைவு
/
விழுப்புரத்தில் கம்பன் விழா நிறைவு
ADDED : ஆக 04, 2025 11:09 PM
விழுப்புரம்:விழுப்புரத்தில் 42வது ஆண்டு கம்பன் விழா சிறப்பு பட்டிமன்றத்துடன் நிறைவடைந்தது.
விழுப்புரம் கம்பன் கழகம் சார்பில் 42ம் ஆண்டு கம்பன் விழா, விழுப்புரம் ஜெயசக்தி மண்டபத்தில் கடந்த 1ம் தேதி துவங்கியது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் விழாவை தொடங்கி வைத்தார்.
நிறைவு நாள் விழாவான நேற்று, கம்பன் கழகம் நடத்திய பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
முன்னாள் சேர்மன் ஜனகராஜ் தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ., சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து நடுவர் ராஜா தலைமை யில் கம்ப ராமாயணத்தில், உறவுகளை பெரி தும் போற்றுபவர்கள் அயோத்தி வாசிகளா, இலங்கை வாசிகளா தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது.
பேராசிரியர்கள் ராஜ்குமார், ரேவதி சுப்புலட்சுமி, கண்ணன், கவிதா ஜவகர் ஆகியோர் பேசினர்.
வணிகர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், டாக்டர் முரளிதரன், லயன் சங்க நிர்வாகிகள் கண்ணன், சபரிநாதன், கோபிநாத், கம்பன் கழக நிர்வாகிகள் வேங்கடவரதன், செந்தில், பரமசிவம், காங்கேயன், அன்பழகன், ஐயப்பன், பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.