sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கண்டமங்கலம் பி.டி.ஒ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

/

கண்டமங்கலம் பி.டி.ஒ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

கண்டமங்கலம் பி.டி.ஒ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

கண்டமங்கலம் பி.டி.ஒ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


ADDED : நவ 06, 2024 10:45 PM

Google News

ADDED : நவ 06, 2024 10:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம்; கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, நேற்று ரஜபுத்திரபாளையம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டமங்கலம் ஒன்றியம் பெரியபாபுசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ரஜபுத்திரபாளையம் கிராம மக்கள் நேற்று முன்தினம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை 11.00 மணிக்கு பணியை மேற்பார்வையிட வந்த கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலக ஓவர்சியர் பணியில் ஈடுபட்டிருந்த மக்களை தரக்குறைவாக பேசியுள்ளார்.

இதனைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மா.கம்யூ., கிளை செயலாளர் ரங்கதுரை தலைமையில் ரஜபுத்திரபாளையம் கிராம பெண்கள் நேற்று கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் துணை பி.டி.ஓ., உமா பேச்சுவார்த்தை நடத்தினர். பி.டி.ஓ.,க்கள் இருவரும், அலுவலக வேலையாக விழுப்புரம் சென்றுள்ளனர். அவர்கள் வந்த பின்பு உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.






      Dinamalar
      Follow us