/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரெட்டணை கென்னடி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி
/
ரெட்டணை கென்னடி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி
ரெட்டணை கென்னடி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி
ரெட்டணை கென்னடி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி
ADDED : மே 17, 2025 11:33 PM

திண்டிவனம்:ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
திண்டிவனம் அடுத்த ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 91 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்று நுாறு சதவீத சாதனை படைத்துள்ளனர். மாணவர் புருஷோத்தமன் 491 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவி காவியா, மாணவர் நவீன் ஆகியோர் 488 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்தனர்.
மாணவி ஷாலினி 487 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தார். இதில் 17 மாணவர்கள், 480 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். கணிதத்தில் 5 மாணவர்களும், அறிவியலில் 10 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 2 மாணவர்களும், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிளஸ் 1 தேர்வில் மாணவர் நித்திஷ், 557 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவி சாருமதி 550 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி பிரியவர்தினி 548 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதில் 20 மாணவர்கள், 500க்கு மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் சண்முகம், இயக்குனர் வனஜா சண்முகம், செயலர் சந்தோஷ், நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.