/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவி கடத்தல்: மாணவர் மீது வழக்கு
/
மாணவி கடத்தல்: மாணவர் மீது வழக்கு
ADDED : பிப் 17, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: பள்ளி மாணவியை கடத்தியதாக பள்ளி மாணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. பிளஸ் 2 படித்து வருகிறார். இவரை கடந்த 14ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவி யின் தாய் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வேறு ஊரைச் சேர்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவர் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.