ADDED : ஆக 18, 2025 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை; வளத்தியில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேல்மலையனுார், அடுத்த வளத்தி கிராமத்தில் கிருஷ்ணர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலையில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது.
மாலையில் உறியடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.