/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா
/
மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா
ADDED : ஜன 01, 2026 06:10 AM

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா நடந்தது.
மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு வழிபாடுகள் நடந்தன.
காலை 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் அபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு,மகாதீபாராதனை நடந்தது. மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் அலகுகளை குத்திக்கொண்டு நேர்த்தி கடனை செலுத்தினார்கள். மாலை 5:00 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்தனர். 6:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து மகா தீபாரதனை வழிபாடு நடந்தது.
இரவு 8:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலத்தில் காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

