/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் கோவிலில் கிருத்திகை விழா
/
மயிலம் கோவிலில் கிருத்திகை விழா
ADDED : பிப் 17, 2024 05:23 AM

மயிலம், : மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.
11:00 மணிக்கு மூலவருக்கு மகா தீபாராதனை நடந்தது. 12:00 மணிக்கு மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கிருத்திகை விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், அங்கபிரதட்சணம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மலைக்கோயில் வளாகத்தில் ஏராளமானவர்கள் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டனர். இரவு 8:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.
செஞ்சி
கிருஷ்ணாபுரம் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவிலில் நேற்று மாசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.