/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நடையம்மன் கோவிலில் வரும் 8ம் தேதி கும்பாபிஷேகம்
/
நடையம்மன் கோவிலில் வரும் 8ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : மே 29, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சி.மெய்யூர் நடையம்மன் கோவிலில் வரும் 8ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.
விழாவையொட்டி, வரும் 7ம் தேதி காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை முதல்கால யாகசாலை பூஜை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ேஹாமம், அங்குரார்ப்பணம், நவகிரக ேஹாமம், யாகசாலை பிரவேசம் நடக்கிறது. தொடர்ந்து, மாலை 6:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை இரண்டாம் கால யாகசாலை பூஜை, கலசார்ச்சனை, வேதபாராயணம், மூலமந்திர ேஹாமம், பூர்ணாஹூதி நடக்கிறது.
இதையடுத்து, 8ம் தேதி காலை 5:00 மணி முதல் 8:30 மணி வரை மூன்றாம்கால யாகசாலை பூஜை, கோ பூஜை, கடம்புறப்பாடு, கும்பாபிஷேகம் நடக்கிறது.