ADDED : நவ 12, 2025 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: மது பாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் டி.புதுப்பாளையம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதி சேர்ந்த பழனிவேல் மகன் ஐயப்பன், 35; என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

