ADDED : ஜன 02, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக்கில் சாராய கடத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார், நேற்று முன்தினம் பில்லுார் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே சந்தேகப்படும் படியாக, பைக்கில் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவரது பையில் 50 சாராய பாக்கெட்டுகள் கடத்தி சென்றதை தெரியவந்தது. மேலும் விசாரித்ததில், அவர், அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ்,50; என்பது தெரியவந்தது. இவர், புதுச்சேரியிலிருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கி கடத்தி வந்தது தெரியவந்தது.
போலீசார் ஆனந்தராஜ் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.