ADDED : ஆக 27, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் செஞ்சி, திண்டிவனம், வானுார், திருவெண்ணெய்நல்லுார், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்துார்பேட்டை கோர்ட் வளாகங்களில், தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் வரும் செப்., 13ல் நடக்க உள்ளது.
இதில் காசோலை, வங்கி கடன், கல்வி கடன் மோட்டார் வாகன விபத்து, விவாகரத்து தவிர்த்து மற்ற குடும்ப பிரச்னைகள், நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள், விற்பனை, வருமானம் மற்றும் சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரித்து சமரசமாக முடிக்கப்படும்.
மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. சட்டரீதியாக சமரச முறையில் தீர்வு காணப்படும்.