ADDED : செப் 05, 2025 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லூர்; லாட்டரி சீட்டு விற்ற டீக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார், கடைவீதியில் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசாருக்கு அப்பகுதியில் உள்ள டீக்கடையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது, 15 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விற்பனையில் ஈடுபட்ட கீழ்மேட்டு தெருவை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் குப்புசாமி,60; என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.63 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.