/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்
/
பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்
ADDED : செப் 24, 2025 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : லட்சுமி நாராயண அஷ்டலஷ்மி கோவில் ஆதி பிரம்மனுக்கு அமாவாசை தாலாட்டு உற்சவம் நடந்தது.
மேல்மலையனூர் லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் ஆதி பிரம்மனுக்கு புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு நடந்தது.
இதையொட்டி, காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் ஆதி பிரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
இரவு 7:00 மணிக்கு ஆதிபிரம்மனுக்கு மகா தீபாராதனையும், ஊஞ்சல் தாலாட்டு உற்சவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.