sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலம் முருகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

/

மயிலம் முருகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

மயிலம் முருகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

மயிலம் முருகர் கோவில் மகா கும்பாபிஷேகம்


ADDED : பிப் 21, 2024 11:23 PM

Google News

ADDED : பிப் 21, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலம் முருகர் கோவிலில் நேற்று நடந்த மகா கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் உள்ள பழமையான முருகர் கோவில் புனரமைக்கப்பட்டது. அதனையொட்டி நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான விழா கடந்த 15ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. 16ம் தேதி சுமங்கலி பூஜை, 17ம் தேதி வாஸ்து பூஜை நடந்தது. 18ம் தேதி முளைப்பாரி இட்டு, காப்பு கட்டப்பட்டது. மாலை யாகசாலை பூஜை தொடங்கியது.

நேற்று முன்தினம் 20ம் தேதி காலை வீர சைவ அடியார்கள் சார்பில் 20ம் பட்ட சுவாமிகளுக்கு குரு திருவடி வழிபாடு மற்றும் நான்காம் யாகசாலை பூஜை நடந்தது.

நேற்று காலை 10.45 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

மாலை அபிஷேகம் மற்றும் பூஜையை தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருமண வைபவம் நடந்தது.

விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்ட சுவாமிகள் மற்றும் திருமடத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us