ADDED : ஜன 26, 2026 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் ரயில் நிலையம், பார்சல் அலுவலகத்தின் முதல் மாடியில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில், அவர் அங்கு யாசகம் எடுத்து வந்தவர் என தெரிந்தது.
தொடர்ந்து, அவரின் சடலத்தை போலீசார் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

