/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக்கில் குட்கா கடத்தியவர் கைது
/
பைக்கில் குட்கா கடத்தியவர் கைது
ADDED : ஆக 22, 2025 03:58 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக்கில் குட்கா பொருட்களை கடத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார், நேற்று எல்லீஸ்சத்திரம் பைபாஸ் கூட்ரோடு அருகே வாகன தணிக்கை செய்தனர்.
அவ்வழியே பைக்கில் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அவர், வாகனத்தில் 1,178 புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருந்ததை கண்டறிந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர், விழுப்புரம், வழுதரெட்டி, காந்தி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ்குமார், 45; என்பதும், அவரோடு சேர்ந்து பெரியார் நகரை சேர்ந்த கமல் என்பவரும் விற்பனையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் பைக்கை பறிமுதல் செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். கமல் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

