sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக்கில் குட்கா கடத்தியவர் கைது

/

பைக்கில் குட்கா கடத்தியவர் கைது

பைக்கில் குட்கா கடத்தியவர் கைது

பைக்கில் குட்கா கடத்தியவர் கைது


ADDED : ஆக 22, 2025 03:58 AM

Google News

ADDED : ஆக 22, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக்கில் குட்கா பொருட்களை கடத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார், நேற்று எல்லீஸ்சத்திரம் பைபாஸ் கூட்ரோடு அருகே வாகன தணிக்கை செய்தனர்.

அவ்வழியே பைக்கில் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அவர், வாகனத்தில் 1,178 புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருந்ததை கண்டறிந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர், விழுப்புரம், வழுதரெட்டி, காந்தி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ்குமார், 45; என்பதும், அவரோடு சேர்ந்து பெரியார் நகரை சேர்ந்த கமல் என்பவரும் விற்பனையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் பைக்கை பறிமுதல் செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். கமல் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us