/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக்கில் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
/
பைக்கில் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : ஏப் 16, 2025 08:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானூர்: ஆரோவில் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுச்சேரி காலாப்பட்டு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் லியோ ராஜ்குமார், 31; காலாப்பட்டு அருள் ஆசிரமத்தில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை பொம்மையார்பாளையத்தில் இருந்து குயிலாப்பாளைத்திற்கு பைக்கில் சென்றார். குயிலாப்பாளையம் தனியார் வங்கி அருகில் சென்றபோது பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்தவரை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று காலை சிகிச்சை பலனின்றி லியோ ராஜ்குமார் இறந்தார். ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.