/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாட்டு வெடிகுண்டு வீசிய நபர் குண்டாசில் கைது
/
நாட்டு வெடிகுண்டு வீசிய நபர் குண்டாசில் கைது
ADDED : மார் 19, 2026 05:08 AM

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைதான நபர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா மூங்கில்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பூவரசன், 27; இவர், கடந்த பிப்., 26ம் தேதி விக்கிரவாண்டி அடுத்த மதுராப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்றார். டீ தீர்த்து விட்டதாக கூறியதால் கடை உரிமையாளர் வேணுவை பூவரசன் தாக்கினார். மேலும், கடையின் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளர்.
விக்கிரவாண்டி போலீசார் பூவரசன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்நிலையில், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க விழுப்புரம் எஸ்.பி., சாய்பிரனீத் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் உத்தரவின்பேரில், விக்கிரவாண்டி போலீசார் பூவரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

