/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மார்க்கெட் கமிட்டிகள் இன்று செயல்படும்
/
மார்க்கெட் கமிட்டிகள் இன்று செயல்படும்
ADDED : ஆக 04, 2025 12:28 AM
விழுப்புரம் : மாவட்ட மார்க்கெட் கமிட்டிகள் இன்று வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மார்க்கெட் கமிட்டிகளில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ -நாம்) திட்டத்தில், விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வியாபாரிகள் பணப்பட்டுவாடா செய்ய வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளில் கடந்த ஜூலை, 30ம் தேதி முதல் வியாபாரிகள், விளைபொருட்களை கொள்முதல் செய்யாமல் 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர். இதனால், மறு அறிவிப்பு வரும் வரை விவசாயிகள் மார்க்கெட் கமிட்டிகளுக்கு பொருட்களை ஏற்றிவர வேண்டாம் என கமிட்டி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று முதல் மார்க்கெட் கமிட்டிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, கமிட்டி மறைமுக ஏலத்தில் வியாபாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.