/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவா போதைப் பொருள் கடத்தியவர் கைது
/
மாவா போதைப் பொருள் கடத்தியவர் கைது
ADDED : அக் 21, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் மாவா போதைப் பொருள் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். சென்னை சாலை விநாயகர் கோவில் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர்.
அதில் அவர் இரண்டரை கிலோ மாவா போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், விழுப் புரம், ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த தங்கதுரை, 46; என தெரியவந்தது.
உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, மாவா போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.