/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்காரணை அரசு பள்ளியில் 'தினமலர்--பட்டம்' இதழ் வினாடி வினா
/
மேல்காரணை அரசு பள்ளியில் 'தினமலர்--பட்டம்' இதழ் வினாடி வினா
மேல்காரணை அரசு பள்ளியில் 'தினமலர்--பட்டம்' இதழ் வினாடி வினா
மேல்காரணை அரசு பள்ளியில் 'தினமலர்--பட்டம்' இதழ் வினாடி வினா
ADDED : ஜன 04, 2024 03:45 AM

விக்கிரவாண்டி: மேல்காரணை அரசு மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி 'தினமலர் -பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து பதில் சொல் அமெரிக்கா செல் என்ற வினாடி வினா போட்டி பள்ளிகளில் நடத்தி வருகின்றது.
மேல்காரணை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த போட்டிக்கு தலைமை ஆசிரியர் ஆனந்த சக்திவேல் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க கல்வி அறக்கட்டளை செயலாளர் முன்னாள் துணை ஆளுனர் சரவணக்குமார், செயலாளர் அன்பழகன், பொருளாளர் சுரேஷ்குமரன் முன்னிலை வகித்தனர்.
பட்டதாரி ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார். போட்டியில் 100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அதில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, 8 குழுக்களாக பிரித்து மூன்று சுற்றுகளாக வினாடி வினாடி போட்டி நடந்தது.
போட்டியில் வேலு, சந்தோஷ்குமார் குழு முதலிடத்தையும்,அர்ச்சணா, வைஷ்ணவி குழு இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் கன்யா ரமேஷ் தலைமையில் கல்வி அறக்கட்டளைத் தலைவர் முத்து சரவணன் பதக்கம், கேடயம் ,சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
போட்டியில் பங்கு பெற்ற 100 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.