ADDED : டிச 13, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டக்குப்பம்: மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் மகள் பவித்ரா, 28; பி.காம்., பட்டதாரி. புதுச்சேரி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை.
இது குறித்து அவரது தாய் வள்ளி அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.