ADDED : ஆக 27, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மகளை காணவில்லை என தாய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
திருப்பாச்சனுார் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகள் பத்மாவதி, 27; இவர் பி.எஸ்.சி., கணினி அறிவியல் முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன், வீட்டிலிருந்து வெளியே சென்ற பத்மாவதி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் காணவில்லை.
தாய் கோதாவரி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து பெண்ணை தேடி வருகின்றனர்.