ADDED : டிச 16, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் அருகே தாயை காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த பில்லுாரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 48; கூலித் தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி, 45; இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மனநிலை பாதித்த நிலையில் இருந்தார். கடந்த 14ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற பரமேஸ்வரி, வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மகன் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.