sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிறுவந்தாடு - மடுகரை சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

/

சிறுவந்தாடு - மடுகரை சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சிறுவந்தாடு - மடுகரை சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சிறுவந்தாடு - மடுகரை சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி


ADDED : நவ 10, 2025 03:56 AM

Google News

ADDED : நவ 10, 2025 03:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: சிறுவந்தாடு - மடுகரை நெடுஞ்சாலையில், ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

வளவனுார் அடுத்த சிறுவந்தாடு பகுதியிலிருந்து, மடுகரை வழியாக புதுச்சேரி பகுதிக்குச் செல்லும் நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.

இந்த சாலையை வளவனுார், சிறுவந்தாடு, கொங்கம்பட்டு, ராம்பாக்கம், சொரப்பூர், சொர்ணாவூர், மடுகரை, ஏம்பலம் உள்ளிட்ட பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

விழுப்புரம் - புதுச்சேரி (மடுகரை வழி) பிரதான இந்த நெடுஞ்சாலை பகுதியில், கொங்கம்பட்டு, மடுகரை பகுதியில் தார்சாலை சேதமடைந்து, ஒரு கி.மீ., தொலைவிற்கு ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மழைக் காலங்களில் சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். அதிக வாகன போக்கு வரத்துள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us