/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிக பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
/
அதிக பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : பிப் 09, 2026 04:28 AM

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பனிப்பொழிவு நீண்ட நேரம் இருந்ததால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க மிகவும் சிரமம் அடைந்தனர்.
விழுப்புரம் மற்றும் கோலியனுார், வளவனுார், திருக்கோவிலுார் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று காலை 9:00 மணி வரை பனிப்பொழிவு இருந்ததால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் காணப் பட்டது.
காலை 9:00 மணி வரை வாகனங்கள் முகப்பு விலக்குகளை எரியவிட்டுச் சென்றனர்.
இந்த பனிப்பொழிவின் தாக்கத்தால், விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதித்தனர்.

