/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எம்.ஆர்.ஐ.சி.ஆர்.சி., பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி - வினா
/
எம்.ஆர்.ஐ.சி.ஆர்.சி., பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி - வினா
எம்.ஆர்.ஐ.சி.ஆர்.சி., பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி - வினா
எம்.ஆர்.ஐ.சி.ஆர்.சி., பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி - வினா
ADDED : நவ 14, 2024 05:57 AM

விழுப்புரம்: விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி.ஆர்.சி. மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர்'பட்டம் இதழ் வினாடி- வினா போட்டி நேற்று நடந்தது.
புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் பதில் சொல் ; பரிசு வெல்' வினாடி-வினா போட்டி நேற்று நடந்தது.
முன்னதாக நடந்த தகுதி சுற்று முதல் நிலைத் தேர்வில், அசுவதி, அலேசியா லூர்து ராணி, ஜனனி, கிரிநாத், மாலதி, ஹரிகரன், கீர்த்தன், ஹரி, புவியரசன், மணிகண்டன், பரணிதரன், திரவியா, சாருமதி, அப்துல் ரஹ்மான், சஞ்சய், ஹரிஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 8 குழுவாக பிரிக்கப்பட்டு, இரண்டு சுற்றுகள் போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் ேஹாஸ்ட் லயன் சங்க தலைவர் மீன் ராஜா, பள்ளி தாளாளர் அருட்தந்தை செல்வநாதன், தலைமை ஆசிரியை ஆரோக்கிய ஜெஸிந்தா மேரி, ஆகியோர் முன்னிலை வகித்தார்.
போட்டியில் மாணவர்கள் ஹரிஷ், சஞ்சய் முதலிடத்தையும், மாணவர்கள் கீர்த்தன், ஹரி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி, கவுரவிக்கப்பட்டது.
இதில், போட்டி ஒருங்கிணைப்பு ஆசிரியைகள் கலைச்செல்வி, பிரியா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

