/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாரம் அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம்
/
சாரம் அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம்
ADDED : அக் 03, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்; திண்டிவனம் அடுத்த சாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்க செயலாளர் அசோக்குமார் சார்பில், 50 மரக்கன்றுகள் என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, பள்ளி வளாகத்தில் நடப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியை சுமதி தலைமையில் நடந்த விழாவில்,விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது. இதில் திட்ட அலுவலர் ஜெயப்பிரியா, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அனந்தராமன், தாவரவியல் ஆசிரியர் பூபாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.