ADDED : அக் 14, 2024 08:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சிறப்பு முகாம் நிறைவு விழா பரையந்தாங்கல் ஊராட்சி பழம்பூண்டியில் நடந்தது.
ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் திருமால் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி மாணவர்களின் சேவை பணியியை பாராட்டி பேசினார்.
திட்ட அலுவலர் முருகன்,கிராம மக்கள் பங்கேற்றனர்.