/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காச நோயாளிக்கு ஊட்டச்சத்து பொருட்கள்
/
காச நோயாளிக்கு ஊட்டச்சத்து பொருட்கள்
ADDED : மார் 15, 2026 04:27 AM

செஞ்சி: காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உலக காச நோய் தினத்தை முன்னிட்டு சத்தியமங்கலம் காசநோய் அலகில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சென்னை வசந்தம் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மருத்துவ அலுவலர் பிரதீபா முன்னிலை வகித்தார். காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் தம்பிராஜா வரவேற்றார். அறக்கட்டளை நிர்வாகி சாம்சன் டேனியல் தலைமை தாங்கி, பயனாளர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் டாக்டர்கள் நந்தகுமார், ராஜ்குமார், செவிலியர் சுகந்தி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர். பயனாளி ரமேஷ் நன்றி கூறினார்.

