ADDED : டிச 24, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: பைக் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். வாலிபர் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் மேற்கு அக்ரஹார தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ், 59; இவர் நேற்று முன்தினம் இரவு அரியலூர் சாக்கோட்டை தெருவை சேர்ந்த அருணாசலம், 28; என்பவருடன் சென்னைக்கு பைக்கில் புறப்பட்டார்.
அன்று இரவு 7:00 மணிக்கு, கருணாவூர் பாட்டை சந்திப்பில் வந்தபோது, சாலையை கடக்க முயன்ற திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் மீது மோதியது.
இந்த விபத்தில் பைக் ஓட்டி வந்த அலெக்ஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். அருணாசலம், ராஜன் படுகாயமடைந்தனர். அவர்களை, அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.