ADDED : அக் 23, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: சாலையோரம் நின்றிருந்தவர் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, கெடார் அருகே, அத்தியூர் திருக்கை கிராமத்தை சேர்ந்தவர் விணுசக்கரவர்த்தி,30; கூலி தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் இரவு 8:45 மணியளவில், இவர் தனது பைக்கில் நண்பர் ராஜேந்திரனை உட்கார வைத்துக்கொண்டு விழுப்புரம் நோக்கி சென்றார்.
அந்த பைக் கெடார் அருகே வந்தபோது சாலையோரம் நின்றிருந்த அதே ஊரை சேர்ந்த பாஸ்கர், 25: என்பவர் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த படுகாயம் அடைந்த மூவரையும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று விணுசக்கரவர்த்தி இறந்தார். புகாரின் பேரில், கெடார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.