sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தலை தீபாவளிக்கு பெற்றோர் வீட்டிற்கு வந்த பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

/

தலை தீபாவளிக்கு பெற்றோர் வீட்டிற்கு வந்த பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

தலை தீபாவளிக்கு பெற்றோர் வீட்டிற்கு வந்த பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

தலை தீபாவளிக்கு பெற்றோர் வீட்டிற்கு வந்த பெண் கிணற்றில் சடலமாக மீட்பு


ADDED : அக் 23, 2025 06:52 AM

Google News

ADDED : அக் 23, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: தலை தீபாவளிக்கு பெற்றோர் வீட்டிற்கு வந்த புதுமணப்பெண், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, காரை காலனியை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி கவிதா, 22; இவர்களுக்கு கடந்த ஆக., 28ம் தேதி திருமணம் நடந்தது.

தலை தீபாவளிக்கு இருவரும், திண்டிவனம் அடுத்த ஊரலில் உள்ள கவிதாவின் பெற்றோர் வீட்டிற்கு கடந்த 20ம் தேதி வந்தனர். கடந்த 21ம் தேதி மாலையிலிருந்து கவிதாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த நல்லியகோடன் என்பவரின் கிணற்றில் கவிதா சடலமாக மிதப்பது நேற்று தெரிய வந்தது. திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இருந்து கவிதாவின் உடலை மீட்டனர். விசாரணை மேற்கொண்ட ரோஷணை போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வயலில் மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை பிடித்துவர சென்றபோது, கவிதா கிணற்றில் தவறி விழுந்து இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

புதுமணப்பெண் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us