ADDED : செப் 15, 2025 02:32 AM
மயிலம்:பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
திண்டிவனம் அருகே தாதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் 50; இவர் அதே ஊரை சேர்ந்த ஏழுமலை மகன் வேலு 34; என்பவரை பைக்கில் அமர வைத்து, கூட்டேரிப்பட்டில் இருந்து, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் நோக்கி நேற்று மாலை 4:15 மணியளவில் சென்றார்.
தென்பசியார் கிராமம் அருகே, சென்ற போது பின்னால் விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் வேலு, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அவரது சடலத்தை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு, மயிலம் போலீசார் அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த முருகன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.