/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பல்லவர் கால கொற்றவை சிற்பம் விழுப்புரம் அருகே கண்டெடுப்பு
/
பல்லவர் கால கொற்றவை சிற்பம் விழுப்புரம் அருகே கண்டெடுப்பு
பல்லவர் கால கொற்றவை சிற்பம் விழுப்புரம் அருகே கண்டெடுப்பு
பல்லவர் கால கொற்றவை சிற்பம் விழுப்புரம் அருகே கண்டெடுப்பு
ADDED : டிச 27, 2025 04:22 AM

விழுப்புரம்: ஏமப்பூர் கிராமத்தில் பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப் பட்டது.
விழுப்புரம் மாவட்டம் ஏமப்பூரில், சோழர் கால வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
எட்டு கரங்களுடன் ஆயுதங்களை ஏந்தி கம்பீரமாகவும், எருமை தலை மீது நிற் பது போல் உள்ள இந்த சிற்பம், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கி.பி., 8, 9ம் நுாற்றாண்டு, பல்லவர் காலத்தை சேர்ந்தது.
மண்ணில் புதைந்து கிடந்த இந்த சிற்பத்தை, கிராம மக்கள் அண்மையில் மீட்டு, தற்போது பூஜை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறுகையில், ''கரசானுார், வெங்கந்துார், வேடம்பட்டு உள்ளிட்ட இடங்களில் கொற்றவை சிற்பங்கள் ஏரி நீருக்குள் மூழ்கியும், மண்ணுக்குள் புதைந்தும் காணப்படுகின்றன.
''இந்த சிற்பங்கள், தமிழர்களின், 1,000 ஆண்டுகளை கடந்த கலை, வழிபாட்டு சின்னங்கள். இவை மீட்டெடுக்கப்பட்டு வழிபாட்டிற்கு கொண்டு வந்து, பாதுகாக்கப்பட வேண்டும்,'' என்றார்.

