sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலத்தில் வரும் 10ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம்

/

மயிலத்தில் வரும் 10ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம்

மயிலத்தில் வரும் 10ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம்

மயிலத்தில் வரும் 10ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம்


ADDED : ஏப் 02, 2025 02:38 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்:மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் வரும் 10ம் தேதி நடக்கிறது. மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று 2ம் தேதி அதிகாலை 5:46 கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவையொட்டி, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. இன்று காலை 11:00 மணிக்கு வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி கிரிவலம் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு வெள்ளி நாக வாகனத்தில் உற்சவர் அருள்பாலிக்கிறார். வரும் 6ம்தேதி இரவு 8:00 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருள்கிறார். 9ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும் வெள்ளி குதிரை வாகனத்தில் மலை வலக்காட்சியும் நடக்கிறது.

வரும் 10ம் தேதி தேர் திருவிழா நடக்க உள்ளது. 11ம் தேதி காலை 9:00 மணிக்கு தீர்த்த வாரி உற்சவமும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 12ம் தேதி முத்து பல்லக்கு உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us