sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பட்டாளி சமூக ஊடக பேரவை மாநில செயற்குழு கூட்டம்

/

 பட்டாளி சமூக ஊடக பேரவை மாநில செயற்குழு கூட்டம்

 பட்டாளி சமூக ஊடக பேரவை மாநில செயற்குழு கூட்டம்

 பட்டாளி சமூக ஊடக பேரவை மாநில செயற்குழு கூட்டம்


ADDED : நவ 24, 2025 05:44 AM

Google News

ADDED : நவ 24, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாளி சமூக ஊடக பேரவை மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கே.ஆர்.எஸ். அம்மா மகாலில் நேற்று காலை பட்டாளி சமூக ஊடக பேரவை முதல் மாநில செயற்குழு கூட்டம், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. கட்சி கவுரவ தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீ காந்தி, சமூக ஊடக பேரவை நிர்வாகிகள் சோழன்குமார், துரைகோபி, தொண்டி ஆனந்தன், கொள்கை பரப்பு செயலாளர் வினயரசு, விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் ஜெயராஜ், புகழேந்தி, திண்டிவனம் நகர செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் செயல் தலைவர் ஸ்ரீ காந்திக்கு, ஊடக பேரவை சார்பில் திரிசூலம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

கூட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும், செயல் தலைவராக ஸ்ரீகாந்தி, மாநில இளைஞரணி தலைவராக தமிழ்க்குமரனை நியமித்ததற்கு நன்றி தெரிவித்தல், வரும் டிச.12 தேதி தமிழகம் முழுவதும் நடக்க உள்ள இடஒதுக்கீட்டு போராட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டடது.






      Dinamalar
      Follow us