sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வெங்கட்ரமணருக்கு முத்தங்கி அலங்காரம்

/

வெங்கட்ரமணருக்கு முத்தங்கி அலங்காரம்

வெங்கட்ரமணருக்கு முத்தங்கி அலங்காரம்

வெங்கட்ரமணருக்கு முத்தங்கி அலங்காரம்


ADDED : ஆக 08, 2025 02:00 AM

Google News

ADDED : ஆக 08, 2025 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணருக்கு நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு முத்தங்கி அலங்காரம் செய்தனர்.

செஞ்சிக்கோட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணனர் கோவிலில் கடந்த, 2ம் தேதி முதல், 9 நாள் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஸ்ரீரங்க பூபதி கல்லுாரி சேர்மன் ரங்க பூபதி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.

நேற்று 6ம் நாள் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், முத்தங்கி அலங்காரமும் செய்தனர்.

தொடர்ந்து பாகவதர் மற்றும் ஆண்டாள் கோஷ்டியினர் பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 2:30 மணிக்கு மகா சிறப்பு அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடந்தது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் விழா குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வைகை தமிழ்செல்வன் மற்றும் உபயதாரர்கள்,பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us