sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏரியில் இருந்து தனிநபர் தண்ணீர் எடுத்து செல்ல மக்கள் எதிர்ப்பு

/

ஏரியில் இருந்து தனிநபர் தண்ணீர் எடுத்து செல்ல மக்கள் எதிர்ப்பு

ஏரியில் இருந்து தனிநபர் தண்ணீர் எடுத்து செல்ல மக்கள் எதிர்ப்பு

ஏரியில் இருந்து தனிநபர் தண்ணீர் எடுத்து செல்ல மக்கள் எதிர்ப்பு


ADDED : நவ 24, 2024 04:51 AM

Google News

ADDED : நவ 24, 2024 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணம் அடுத்த கொள்ளுமேடு ஏரியில் தனிநபர் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுத்துச் செல்வதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால், பரபரப்பு நிலவியது.

மரக்காணம் அடுத்த உள்ள கந்தாடு ஏரி ஓரத்தில் அரசு ஆழ்துளை கிணறு அமைத்து மரக்காணம் பேரூராட்சி மற்றும் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது.

கந்தாடு ஊராட்சிக்குட்பட்ட கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றின் தண்ணீர் உவர்நீராக மாறியுள்ளது. இதனால் விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கந்தாடு பெரிய ஏரி அருகில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதிலிருந்து பைப் லைன் மூலம் அவரது விவசாய நிலத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகம், வருவாய்துறை மற்றும் சில அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதிகாரிகள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அனுமதி வழங்கியுள்ளனர்.

அதன் பின் அந்த விவசாயி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டார்.

நேற்று மதியம் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கொள்ளுமேடு சாலையோரம் பைப் லைன் அமைப்பதற்கான பள்ளம் தோண்டினார்.

இதனைப் பார்த்த கந்தாடு பழைய தெருவை சேர்ந்த பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தி விவசாயியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மரக்காணம் வருவாய் ஆய்வாளர் வனமயில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் பணியில் ஈடுபட்ட விவசாயியிடம் அதிகாரிகள் பணியை நிறுத்தி வைக்கும்படி கூறியதால் பணி நிறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us